புதுதில்லி, அக்.2- சரக்கு மற்றும் சேவைவரி எனப் படும் ஜிஎஸ்டி (Goods and Services Tax) வரி வருவாயானது, 19 மாதங்க ளில் இல்லாத அளவிற்கு, கடந்த செப்டம்பரில் ரூ. 91 ஆயிரத்து 916 கோடியாகக் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வருவாய் குறித்த தகவலை மத்திய அரசு செவ்வாய்கிழமை யன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் மாதத்தில் மொத்தம் ரூ. 91 ஆயிரத்து 916 கோடி வசூலாகியுள்ளது. இதில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ. 16 ஆயிரத்து 630 கோடியும், மாநில ஜிஎஸ்டி-யாக ரூ. 22 ஆயிரத்து 598 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாக ரூ. 45 ஆயிரத்து 69 கோடியும் வசூலாகி இருக்கிறது. ‘செஸ்’ எனப்படும் கூடு தல் வரி வருவாய் ரூ. 7 ஆயிரத்து 620 கோடியாக இருந்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டின், இதே செப்டம்பர் மாதத்தில்கூட, ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 94 ஆயிரத்து 442 கோடியாக இருந்துள்ளது. தற் போது அதைக்காட்டிலும் 2.67 சத விகிதம் வருவாய் குறைந்துள்ளது. மேலும், தற்போது வசூலாகி யுள்ள தொகைதான், கடந்த ஒன் றரை ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவு என்று கூறப்படு கிறது. அத்துடன், தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் ஒரு லட்சம் கோடிக்கு கீழே போயிருக்கிறது. நாட்டு மக்களின் வாங்கும் திறன் குறைந்ததே, ஜிஎஸ்டி வருவாய்க் குறைவுக்குக் காரணம் என பொரு ளாதார வல்லுநர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். அக்டோபர் மாதம் பண்டிகைக் காலம் என்பதால் இம் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் அதி கரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.